Posts

Showing posts from March, 2018

கெட்ட சகுணம்

Image
கெட்ட சகுணம் அக்பர், பீர்பாலிடம் பொதுவான விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, பீர்பால் உங்களுக்கு சகுணங்களில் நம்பிக்கை உண்டா? நம் நாட்டில் கெட்ட சகுணம் என்று சொல்லுமளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா? என்றார். அக்பர் பீர்பால் கதை அக்பரின் கேள்வி பீர்பாலை வேதனை அடைய வைத்தது. அறிவு பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தும் அரசர். இப்படி மூட நம்பிக்கைகளில் தம் மனதை திசை திருப்புவது, பீர்பாலுக்கு பிடிக்கவில்லை. தம் மனதுக்குள் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அரசே மற்றவர்கள் கண்டு வெறுக்கும் படியான கெட்ட சகுனம் மிக்க ஒருவன் இவ்வூரில் வசிக்கிறான், காலையில் யாரும் அவனது முகத்தில் விழித்தாலே அன்றைய பொழுது முழுவதும் ஒரு வாய் சோறு கூட கிடைக்காது, படாத பாடு பாட வேண்டும் என்றார் பீர்பால். அப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலியை நான் பார்க்க வேண்டும் அரண்மனைக்கு அழைத்து வாருங்கள், அவன் முகத்தில் நான் விழிக்கிறேன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்று ஆவல் பொங்க கூறினார் அக்பர். அடுத்த நாள் இரவு பீர்பால் ஒருவனை அழைத்து வந்தார். அரண்மனையில் தங்க வைத்தார். அக்பர் படுத்துறங்கும் அறையிலே...

குளிரில் நின்றால் பரிசு

குளிரில் நின்றால் பரிசு ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடி கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்தி கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து “பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கலாம்” என்றார். “அரசே, சிங்கத்தின் முடியை கூட கொண்டு வந்து விடலாம். ஆனால் நடுங்கும் குளிரில் இரவு முழுவது ஆற்றில் நிற்பது என்பது சதாரண காரியமா?” என்றார் பீர்பால். “யமுனை ஆற்றில் குளிரில் நிற்பதற்கு எந்தவித திறமையும் தேவையில்லை, மன உறுதி இருந்தாலே போதும்! நாடு முழுவதும் இந்த செய்தியை அறிவிக்க சொல்லுங்கள்! பணத்தின் மீது ஆசைப்பட்டு நிறைய பேர் பங்கு பெற வருவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் எனப்பார்ப்போம்” என்றார் அக்பர். அரசரின் ஆணை நாடெங...

கிணற்றுக்குள் வைர மோதிரம்

கிணற்றுக்குள் வைர மோதிரம் அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார். அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், “தலைநகரில் உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார். “இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை” என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், “பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,” என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் ...

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்னபடி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி த...

காளை மாட்டின் பால்

காளை மாட்டின் பால் சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதை கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர். ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர். “வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்றார் ஜாலிம்கான். “நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்து இருக்கிறோம்” என்ற அவர்கள், “பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர். “பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!” என்றார் ஜாலிம்கான். வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்கள...

காரணம் என்ன?

காரணம் என்ன? அக்பரின் அரச சபையில் அறிஞர்களும் புலவர்களும் கூடியிருந்தார்கள். அப்போது அக்பர் திடீரென்று ஒரு கேள்வியை சபையில் கேட்டார். என் உள்ளங்கையில் ஏன் ரோமம் முளைக்க வில்லை? என்று கேட்டார். அக்பரின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று சபையில் உள்ளோர் திகைத்துப் போனார்கள். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் பீர்பால் மன்னரிடம் சாதுர்யமாய் எதையாவது கூறி நல்ல பெயரை தட்டிச் சென்று விடுவாரே என்ற கவலை இருந்தாலும் அக்பர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. சபையில் உள்ளோர் அனைவரும் மெளனம் சாதித்ததை கண்டதும் அக்பர் என்ன பீர்பால் நீங்களே சொல்லுங்கள் என்றார் மன்னர். தங்களது பொற்கரங்களால் அனைவருக்கும் பொருளை வாரி வழங்குகிறீர்கள். தொடர்ந்து செல்வத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பதால் தங்களது உள்ளங்கையில் ரோமம் முளைக்க வில்லை! என்றார் பீர்பால். அக்பர் அத்துடன் விடவில்லை பீர்பாலிடம், உங்கள் கைகளில் ரோமம் முளைக்காததற்கான காரணம்? என்று கேட்டார். சற்றும் தாமதிக்காமல் பீர்பால் ஒவ்வொரு நாளும் தங்களிடம் அன்பளிப்பை என் கைகள் பெற்றுக் கொண்டே உள்ளது அல்லவா? அதனால் என் கரங்களில் ரோமம்...

காகங்களின் எண்ணிக்கை என்ன?

காகங்களின் எண்ணிக்கை என்ன? அக்பர் தமது பிரச்சனைகளுக்கு விடை காண பீர்பாலையே நம்பியிருப்பது அரச சபையில் இருந்த மற்ற அமைச்சர்களுக்கு வருத்தமாகவும் பொறாமையாகவும் இருந்தது. இது குறித்து அரசரிடம் எல்லோரும் ஒன்று கூடி கேட்டு விடுவது என தீர்மானித்தார்கள்.அரச சபை கூடியது, அரசே தாங்கள் எந்த பிரச்சனைக்கும் பீர்பாலையே எதிர் பார்க்கிறீர்கள்.  அமைச்சர்களாகிய எங்களை மட்டம் தட்டுவது போலவும், முட்டாள் ஆக்குவதாகவும் உள்ளது என்று அமைச்சர்கள் ஒன்றுகூடி மன்னரிடம் முறையிட்டார்கள். அமைச்சரின் குற்றச்சாட்டினைக் கேட்டு அரசர் சிரித்துக் கொண்டார். அமைச்சர்களே பீர்பாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் அவரது அறிவாற்றலும் திறமையும், சாதுர்யமான பேச்சும் தானே தவிர தனிப்பட்ட முறையில் எந்த காரணமும் இல்லை. அவரது மதிநுட்பத்தை போற்றுகிறேன் அதனால் உங்கள் அனைவரையும் இழிவாக கருதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் வந்துவிடுவார். உங்களுக்கு முன்னால் அவரை சோதிக்கிறேன். அவரது அறிவுத் திறமையை தெரிந்துக் கொள்ளுங்கள் என்றார் அக்பர். சிறிது நேரத்தில் பீர்பால...

இறைவன் அளித்த பரிசு

இறைவன் அளித்த பரிசு அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர். தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார். அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார். சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார். அரசர் மிகுந்த சிவப்புநிறம், மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறமாகக் காணப்பட்டார். அரசர் பெருமான், மிகுந்த சிவப்பு நிறமாக மின்னும் பொழுது, பீர்பால் எல்லோரிலும் கருநிறமாகக் காட்சி அளிக்கிறாரே அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன் எனக் கூறினார். உடனே எழுந்த பீர்பால், ”இறைவன் தம்முடைய அடியார்களுக்குத் தம்முடைய பாக்கியங்களை வழங்கும் போது, நீங்கள் எல்லாரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள். நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். யார் எதைக் கேட்டார்களோ,...

இறைவன் அளித்த பரிசு

இறைவன் அளித்த பரிசு அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர். தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார். அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார். சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார். அரசர் மிகுந்த சிவப்புநிறம், மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறமாகக் காணப்பட்டார். அரசர் பெருமான், மிகுந்த சிவப்பு நிறமாக மின்னும் பொழுது, பீர்பால் எல்லோரிலும் கருநிறமாகக் காட்சி அளிக்கிறாரே அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன் எனக் கூறினார். உடனே எழுந்த பீர்பால், ”இறைவன் தம்முடைய அடியார்களுக்குத் தம்முடைய பாக்கியங்களை வழங்கும் போது, நீங்கள் எல்லாரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள். நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். யார் எதைக் கேட்டார்கள...

ஆகாயத்தில் அழகிய மாளிகை

Image
ஆகாயத்தில் அழகிய மாளிகை ஆகாயத்தில் அழகிய மாளிகை  அக்பர் பீர்பால் கதை ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்த படி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.  அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார். அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார்.  என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று  தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.  எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை.  அதற்கான ஆக்கபூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர். மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும்.  அசட்டு தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை.  ஆகாயினால் இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணரந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால். என்ன பீர...

அறிவுப் பானை

Image
அறிவுப் பானை வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார்.  முகலாய சாம் ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார்.  தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்த வில்லை.  ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகு வைத்து விட்டதாகக் கருதினர்.  அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர்.  அதற்கு வீரசிம்மன், “நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன்.  ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள்.  அவர்களுடைய படை பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். அதற்கு அவர்கள் “படைப்பலத்தை மட்டும் ஏன் ஒ...

அபசகுனம்

Image
அபசகுனம் அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள வினாயகர் படத்தை தான் பார்ப்பார். ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வ்ந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார். இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார். அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார். அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே, அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார். அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்...

அசலும் போலியும்

அசலும் போலியும் அக்பர் பீர்பால் கதைகள் ஒரு நாள் மாறு வேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும் நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும், பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது. அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார். ஊன முற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான செயலாகும். ஊன முற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம் இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு பரிகாரம் செய்வது நல்லது தான் என்றார் பீர்பால். இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார் மன்னர். இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்றார் பீர்பால். பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும் இலவசமாக உணவு அளிக்கபட்டது. இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல் ஊன முற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி உண்பது அதிகமானது. இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம...

அக்பர் பீர்பால் பிரிவு

அக்பர் பீர்பால் பிரிவு அக்பரும் பீர்பாலும் ஒருமுறை ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது. பீர்பால் அரசரை பிரிய மன மில்லாமல் பிரிந்து சென்றார். அரசர் பீர்பாலின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் வருத்தப்பட்டார். அக்பர் படைவீரர்களுக்கு பீர்பால் எங்கு இருந்தாலும் அழைத்து வருமாரு உத்தரவிட்டார். படைவீரர்கள் எங்கு தேடியும் பீர்பால் கிடைக்கவில்லை. இதனால் அக்பர் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார். அக்பர் உடனே ஒரு யோசனை செய்து, அனைத்து நாட்டு மன்னர்களுக்கும் ஒரு ஓலை அனுப்பினார். அந்த ஓலையில் கூறியிருந்தாவது, எங்கள் நாட்டில் உள்ள கடல்களுக்கும், மலைகளுக்கும் திருமணம் நடத்த உள்ளோம் எனவே உங்கள் நாட்டில் உள்ள கடலையும் மலைகலையும் திருமணத்திற்கு அனுப்பும்மாறு கேட்டு கொள்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது. அக்பரின் ஓலையை கண்டு ஒரு அரசன் பதில் ஒலை அனுப்பிருந்தார் அதில் என் அன்பிற்குரிய அரசே உங்கள் நாட்டில் நடக்கும் திருமணத்திற்கு எங்கள் நாட்டில் உள்ள கடல்களும், மலைகளும் வாழ்த்த வருகின்றன எனவே உங்கள் நாட்டில் உள்ள குளங்களையும், ஏரிகளையும் வரவேற்க தயாராக இருக்க சொல்லுங்கள் என்று எழு...